தலைவன் கூற்று
“அவள் வாய் இதழ்ச்சுவை தேன்; அது பாலொடு தேன் கலந்ததுபோல இருந்தது.”
“எம் நட்புப் பிரிக்க முடியாதது; உடம்புக்கும் உயிருக்கும் உள்ள இயைபு அஃது என்று கூறுவேன்.”
“கண்களில் உள்ள கருமணி சற்று விலகினால்தான் என் காதலிக்கு அங்குத் தங்க இடம் தர முடியும். அதனைச் சற்று ஒதுங்கச் சொல்ல வேண்டியதுதான்.”
“சேரும்போது அவள் என்னை வாழ வைக்கிறாள்; பிரியும்போது என் உயிரே போய்விடும் போல இருக்கிறது. வாழ்வும் சாவும் அவள் கையில்தான் இருக்கின்றன.”
‘அவளை நினைக்க வேண்டுமென்றால் மறக்க வேண்டி உள்ளது; அவளை மறக்க இயலவில்லை.”
தலைவி கூற்று
“என் கண்களிலேயே காதலர் உறைகின்றார்; இமைத்தாலும் அதனால் அவர் துன்பப்படுவது இல்லை; மிகவும் நுட்பமானவர் என் காதலர்.”
“மை இட்டு எழுதுவதில்லை; அவர் என் கண்விட்டு மறைந்துவிடுவார் என்பதனால்.”
“சூடாக எதனையும் யான் குடிப்பது இல்லை; அவர் என் நெஞ்சில் தங்கி இருப்பதனால்."