பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
35


அந்த நட்புப் பொய்யானதாகும்; புறங்கூறிப் பேசி விட்டு அவனை நேரில் காணும்போது பொய்யாக உறவாடுதல் கீழ்மையாகும்; அதனைவிடச் செத்துப் போகலாம்; தவறுகள் செய்யமாட்டான்.

நேரில் சந்திக்கும்போது கன்னத்தில் அறைந்தாற் போல நாலு சொல் சொல்லிக் கண்டித்துவிடு அது மேலானது ஆகும்; அவன் இல்லாதபோது அவனைப் பழித்துக் கூறாதே.

புறம்கூறி உன்னைத் தாழ்த்திக்கொண்டால் அறம் கூறும் நெஞ்சத்தன் அல்லன் என்று உன்னை இகழ்வார்கள்; நீ சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள்.

பிறன் குறையை அவன் இல்லாதபோது பேசிக் கொண்டே இருந்தால், அவனும் உன் குறைகளை அறிந்து வைத்து அவற்றைப் பலபேருக்கும் பரப்புவான். ஏன் இந்த வீண் வம்பு உனக்கு? சிரித்துப் பேசி நட்பை வளர்ப்பதை விட்டுப் பிரித்துப் பேசிப் பிளவை ஏற்படுத்துவது அறியாமையாகும்.

நெருங்கிப் பழகியவரிடத்தேயே குறைகளைக் கண்டு தூற்றும் ஒருவன் பழகாத புதுமையாளரோடு எவ்வாறு நடந்துகொள்வான்? அவனைக் கட்டுப்படுத்த முடியாது; உளறுவதே தொழிலாக்கிக் கொள்வான்.

புறங்கூறிப் பொய்த்து வாழ்பவனை அறம் நோக்கி இந்த மண் சுமக்கிறது என்றுதான் கூற முடியும். அது தன் கடமையைச் செய்கிறது. இவர்கள் வாழத் தகுதி உடையவர்கள் அல்லர்.