பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் மருந்து மருத்துவர் கூறும் வாத பித்த கபங்கள் கூடினாலும் குறைந்தாலும் நோய் தரும். 941 முன் உண்டது. செரித்தது பார்த்து உண்டால் உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம். 942 செரித்தால் செரிமானம் பார்த்து உண்: அதுவே உடல்பெற்றவன் நெடுநாள் வாழும்நெறி. 943 செரித்தது பார்த்து அம்முறை பற்றி ஒத்துக்கொள்வதை நன்கு பசித்தபின் உண்க: 944 ஒத்துக்கொள்வதையும் அளவாக உண்டால் உயிர்க்கு யாதும் நோய் இல்லை. 945 கழிவறிந்து உண்பவனிடம் உடல்நலம் இருக்கும்; நிரம்பத்தின்னியிடம் நோய் குடிகொள்ளும். 946 பசியளவு தெரியாமல் மிக உண்டால் நோய் அளவில்லாமல் வரும். 947 நோயையும் காரணத்தையும் தீர்க்கும் வழியையும் மருத்துவன் அறிந்து வெற்றியாகச் செய்க. 948 நோயாளியின் நிலையையும் நோயின் நிலையையும் காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க. 949 நோய்ாளி மருத்துவன் மருந்து துணையாளி என்ற நான்கும். மருத்துவத்தின் கூறுகள். 950 192 நட்பியல் அதிகாரம் 95 மருந்து - மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் ಥ್ರೀ? எண்ணிய மூன்று. 941 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் 942 அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு ப்ெற்றான் நெடிதுய்க்கு மாறு: 943 அற்றது அறிந்து தடைப்பிடித்து மாறல்ல துய்க்க் துவரப் பசித்து. 944 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு 945 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கிழிப்ே ரிரையான்கண் நோய். 946 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். - 947 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். 948 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். 949 உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. 950 193