பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இரவச்சம் (கேட்க அஞ்சுதல்) ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் அன்பரிடத்தும் ஒன்றுபோய்க் கேளாமை கோடி நல்லது. 1061 பிச்சையாலும் வாழ ஏற்படுத்தி இருப்பின் பொருள் படைத்தவன் கெட்டு அலைவானாக. 106, வறுமைத் துன்பத்தை வாங்கித் தீர்ப்பேன் என்பது பெரிய முரட்டுத்தனமாம். 1063 இல்லாத போதும் இரக்காத நிறைகுணம் வீடு நிறைந்த செல்வத் தன்மை உடையது. 1064 உழைப்பால் வந்தது கஞ்சித் தண்ணராயினும் அதனை உண்பதுபோல் சுவை வேறில்லை. 1065 . பசுவுக்குத் தண்ணீர் என்று கேட்டாலும் கேட்ட நாவிற்குப் பெருமை இல்லை. 1066 கேட்டாலும் ஒளிப்பாரிடம் கேளாதீர் என்று இரப்பாரை எல்லாம் கேட்டுக் கொள்வேன். 1067 பிச்சை என்னும் துணையற்ற படகு ஒளிப்பாகிய பாறை மோதின் உடைந்துவிடும். 106; பிச்சையை நினைத்தால் மனம் குலையும்; மறைப்பதை நினைத்தால் மனம் சாகும். 1069 கேட்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் மறைப்பவருக்குப் போகாது எங்கிருக்கும்: 1070; 21 6 - குடியியல் அதிகாரம் 107 இரவச்சம் கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி யுறும். 1061 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். 1062 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்டது இல். 1063 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. 1064 தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி ಫಿ# இல். 1065 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இர்வின் இளிவந்த்து இல், 1066 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. 1067 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். , . 1068 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளது.உம் இன்றிக் கெடும். 1069 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். 1070 15 217