பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் கயமை (கீழ்மை) கயவர் மக்கள்போன்றே இருப்பர். அன்ன வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை. 1071 மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்? மனத்தில் எதற்கும் கவலைப் படார். 1072 கயவர்கள் அரசர் போன்றவர்கள்; ஏன்? தாம் விரும்பியபடியே நடப்பார்கள். 1073 கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால் போற்றப்பட்டு இறுமாப்பர். 1074 அச்சமே கயவர்களின் இயல்பு: புகழாசை இருந்தால் சிறிது இருக்கலாம். 1075 கயவர் அறிவிக்கும் பறைபோல்வர்; ஏன்? - மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர். 1076 பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள் எச்சிற்கையும் உதறமாட்டார்கள். 1077 சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்; கரும்புபோல் நசுக்கின் பயன்செய்வர் கீழோர். 1078 உண்டு உடுத்து நட்ப்பதைக் கண்டாலே - அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன். 1979 எதற்குத் தகுதி கயவர்? ஏதும் கிடைப்பின் விரைந்து தன் மானத்தை விற்கத் தகுதி. 1980 21 6 குடியியல் மக்களே போல்வர் கயவர் அவரன்ன மற்ைபிறர்க்கு உய்த்துரைக்க லான். அதிகாரம்108 ՅԱՍ65)Ա) ஒப்பாரி யாங்கண்டது இல். 1071 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். 1072 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் ம்ேவன செய்தொழுக லான். 1073 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் °. மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ், 1074 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்ட்ாம் சிறிது. 1075 அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட 1076 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கைய ரல்லா தவர்க்கு. 7 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ், - 1078 உடுப்பதூஉம் உண்பதுடிம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ் 1079 எற்றிற் குரியர் கயவரென்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. 219 1080