பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் - குறிப்பறிவுறுத்தல் நீ மறைத்தாலும் மீறி உன் கருங்கண்கள் ஏதோ ஒன்றைச் சொல்லுகின்றன. 1271 கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் பெற்ற காதலிக்குப் பெண் தன்மை மிகுதி. 1272 மணிக்கோவையுள் நூல் தெரிவது போல மங்கை அழகில் ஒரு குறிப்புத் தெரிகின்றது. 1273 மொட்டுக்குள் மணம் இருத்தல் போல இவள் சிரிப்புக்குள் ஒரு குறிப்பு உண்டு. 1274 வளை நிறைந்தவள் செய்து போன கள்ளத்தில் என் துயர் தீர்க்கும் மருந்து டண்டு. 1275 மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும் கொடுமைக் குறிப்பு உண்டு. 1276 குளிர்ந்த துறைவன் பிரிவான் என்பதை நம்மினும் முந்தி வளையல்கள் உணர்ந்தன. 1277 நேற்றுத்தான் காதலர் பிரிந்தார். அதற்குள் ஏழு நாள் அளவு பசலை அடைந்து விட்டேன். 1278 வளையலையும் தோளையும் காலையும் பார்த்தாள்: இது பிரிவு சொன்னபோது அவள் செய்தது. 1279 காமநோயைக் கண்ணாற் சொல்லி வேண்டுதல் சிறந்த பெண்தன்மை என்று சொல்லுவர். 1280 260 கற்பியல் அதிகாரம் 128 குறிப்பறிவுறுத்தல் கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்க லுறுவதொன்று உண்டு. 1277 கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை ந்கைமொக்குள் உள்ளதொன்று உண்டு. 1274 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கு மருந்தொன்று உடைத்து. 1275 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. 276 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. 1277 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. - 1278. தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது. 1279 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. 1280 261