பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் வினைத்துய்மை நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும்: நல்ல செயல் வேண்டியன எல்லாம் தரும். 651, புகழும் நன்மையும் தராத காரியத்தை - என்றும் ஒழித்துவிட வேண்டும். 652 முன்னேற வேண்டும் என்பவர் மதிப்புக் குறையும் காரியங்களைக் கொள்ளாது விடுக. 653 அதிராத அறிஞர் நெருக்கடிபட்டாலும் இழிந்த செயல்களைச் செய்யார். 654 என்செய்தேன் என்று பின்வருந்தும் செயலைச் செய்யாதே செய்தால் திரும்பவும் செய்யாதே. 655 பெரியவர் பழிக்கும் தீய வினைகளை நின்தாய் பசித்துக் கிடந்தாலும் செய்யாதே. 656 நல்லவர் பழிசூடி எய்தும் செல்வத்தினும் - அவர்தம் வறுமையே பெருமையுடையது. 657 விலக்கியவற்றை விலக்காது செய்தவர்க்குக் காரியம் முடிந்தாலும் துன்பம் உண்டாகும். 658 பிறர் அழக்கொண்டவை நாம் அழப்போகும்; நல்லவை முன் தொலையினும் பின் பயன்தரும். 659 ஏமாற்றிக் கொண்ட பொருள் நிலைக்காது: சுடாத மண்பானையில் நீர் தங்குமா? 660 134 அமைச்சியல் அதிகாரம் 66 வினைத்துய்மை ணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வண்டிய எல்லாம் தரும். 651 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. 652 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். 653 இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். 654 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. 655 ஈன்றாள் பசிகாண்டான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வின்ை. 656 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. 657 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். 658 ஆழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. 659 சலத்தால்_பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள்நீர் ப்ெய்திரீஇ யற்று. 660 135