பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் இகல் (மாறுபாடு) மாறுபாடு என்னும் குணம் உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும். 851 பகைமை கருதித் தகாதன செய்தாலும் மாறுபாடு கருதிக் கொடுமை செய்யற்க. 852 மாறுபாடு என்னும் தொழுநோய் நீங்கினால் அழிவில்லாத அறிவுவிளக்கம் உண்டாகும். 853 மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால் சிறந்த இன்பம் விளையும். 854 மாறுபாட்டுக்கு ஒதுங்கிப் போய்விடுவாரை வம்புக்குத் தூண்ட யாரால் இயலும் 855 வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு சிதைதலும் அழிதலும் நாளாகாது. 856 மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறியார். 857 மாறுபாட்டுக்கு ஒதுங்குதல் முன்னேற்றமாம்; ஒதுங்காது நிமிர்ந்தால் கேடு வளரும். 858 தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்; பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான். 859 எல்லாத் துன்பமும் வேற்றுமையால் வரும்: - நலமான உணர்ச்சி நல்லுறவால் உண்டாம். 860 174 நட்பியல் அதிகாரம் 86 இகல் இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். 851 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. 852 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். 853 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின், 854 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலுக்கும் தன்மை யவர். 855 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நனித்து. .* * 856 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல். இன்னா அறிவி னவர். 857 இகலிற்கு எதிர்சாய்தல் པཎྜི:ཧྥུ་སི அதனை மிகலுக்கின் ஊக்குமாம் கேடு. 858 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. 859 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. 860 - 175