பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

தினது தன்மையினாலே, அது ஆகும் - தன் தன் மை திரிந்து

அந்த இனத்தின் தன்மைத்தாகிவிடும்.

(கரை) நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறு பட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகி விடும்.

3. மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்.ஆம் இன்னான் எனப்படும் சொல். 453

!ப-ரை) மாந்தர்க்கு - மக்களுக்கு, உணர்ச்சி - பொது உணர்ச்சியானது, மனத்தான் ஆம் . தன் மனத்தின் காரணமாக உண்டாவதாகும், இன்னான் - இவன் இப்படிப் பட்டவன், எனப்படும் சொல் - என்று கூறப்படும் சொல்லானது,இனத்தான் - அவன் சேர்ந்த இனத்தினாலே, ஆம் - உண்டாவதாகும்.

கடரை மாந்தர்க்குப் பொது உணர்வு மனம் காரண

காக உண்டாகும். இவன் இத்தன்மையன் என்று உலகத்

தாரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாகிவிடும்.

4. மனத்துஉளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துஉளது ஆகும் அறிவு. 454

|ப-ரை அறிவு - சிறப்பான அறிவானது, ஒருவற்கு - ஒருவனுக்கு, மனத்து உளது போல - மனத்தினாலே உண்டாவதுபோல, காட்டி - தன்னைப் புலப்படுத்தி, 'உண்மையில்) இனத்து - அவன் சேர்ந்த இனத்தினாலே,

உளது - உள்ளது, ஆகும் - ஆகும்.

(கரை) ஒருவனுடைய சிறப்பான உணர்வானது தனது மனத்தில் உள்ளதுபோலப் புலப்படுத்தி உண்மையில்

அவன் சேர்ந்த இனத்தினாலே அமைவதாகும்.