277
10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர், 640
(ப-ரை) திறப்பாடு . செயலினை முடித்தற்கேற்ற முறைகளை, இலாதவர் . அறிந்தில்லாதவர்கள், முறைப் படசெய்ய வேண்டிய சொல்களை முன்பாகவே தெளிவுற, சூழ்ந்தும் - ஆராய்ந்து வைத்திருந்தும், முடிவிலவே . செய்யும்போது அவர்கள் முடிவுறாதபடியே, செய்வர் . செய்பவராவார். -
(க-ரை முடிப்பதற்கு ஏற்ற கூறுபாடுகள் அறியாத வர்கள், செய்யப்படும் தொழில்களை முன்பாகவே நன்கு எண்ணி வைத்திருந்தும் செய்யும்போது அவை முடியாத முடியே செய்வார்கள்.
\
65. சொல் வன்மை
'சொற்களைச் சொல்லுவதில் ஆற்றலுடைமை)
1. நாகலம் என்னும் நலன்உடைமை அங்கலம்
யாகலத்து உள்ளது உம் அன்று. 641
(டி-ரை) நா - நாவினால் உளதாகிய, நலம் . நன்மை, என்னும் - என்று சிறப்பித்துக் கூறப்படும், நலம் - நலத்தினை, உடைமை - உடையவராக இரு த் த ல் {வேண்டும்), அந்நலம் - அந்தச் சிறப்பானது, யாநலத்து - பிற நலங்கள் எல்லாவற்றிலும், உள்ளது உம் - அடங்குவ தும், அன்று - அல்ல (எல்லாவற்றையும்விட மேலானதாம்)
(கரை) அமைச்சரிக்கு மிகச் சிறந்த குணமாவது நாவின் நலம் உடையவராக இருத்தலாகும். அந்நலம் பிற எல்லா நலங்களையும் விட மேலானதாகும்.