பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை

அறத்துப்பால்

பாயிரம்

1. கடவுள் வாழ்த்து (இறைவனது பண்புகள், வழிபாடு பயன் முதலியவற்றைக் கூறுதல்)

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

பதவுரை :-எழுத்தெல்லாம் - உலகில் வழங்கி வரும் எழுத்துக்களெல்லாம், அகரம் - ஒலி வடிவமான அகர மாகிய, முதல - முதலை உடையனவாகும், (அதுபோல) உலகு - உலகம், ஆதிபகவன் - ஆதிபகவனாகிய, முதற்று - முதலை உடையதாகும்.

கருத்துரை :-உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒலி வடிவான அகரமாகிய முதலை உடையன; அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.