பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

(க-ரை) இப்பெண்ணின் துதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உளதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் கூடி யாம் பெறுவோமோ?

9. ஊடுக மன்னோ ஒளிஇழை யாம் இரப்ப

tடுக மன்னோ இரா. 1.32%

(ப-ரை ஒளி . ஒளிதருகின்ற, இழை அணிகலன் களையுடைய இவள், ஊடுகமன்.எம்முடன் கிடுைதல் செய்து கொண்டிருப்பாளாக, (அப்பிணக்கினை நீக்குவதற்காக 1. யாம் இரப்ப - யாம் வேண்டிக் கொண்டிருக்கும் வரையில், இரா - இந்த இரவுப் பொழுது. நீடுகமன் - நீண்டு கொண் டிருப்பதாகுக !ஓங்காரங்கள் அசைநிலை)

(க.ரை ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட அப்பெண் எம்முடன் வாடுதல் செய்வாளாக அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெறும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.

10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்

கூடி முயங்கப் பெறின். H330.

(ப-ரை) காமத்திற்கு - காமமாகிய இன்ப நுகர்ச்சிக்கு, இன்பம் -இன்பமாக இருப்பது, வண்டுதல் ,கடலாகும் கூடி. (ஊடலினை அளவுடன் நீக்கி) இருவரும் சேர்ந்து, முயங்கப் பெறின் தழுவிக் கொள்ளுதல் கூடுமானால், அதற்கு . அந்த ஊடலுக்கு, இன்பம் - அதுவே இன்பம் தருவதாகும்.

|க-ரை காம நுகர்ச்சிக்குத் தமக்குள் ஊடல் செய்வது இன்பமாகும். ஊடலுக்கு இன்பமாவது காதலர் சேர்த்து தழுவிக் கொள்ளுதலாகும்,

முற்றும்