பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் } {}.3 -ស្ទឺឃ៩៦ 50. இடன் அறிதல் தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல்லது. 49? முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். 492 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். 433 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். 494 நெடும்புனலுன் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 495 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நில்த்து. 436 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின். 497 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். 498 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. 500