பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் # 2% அரசியல் 63. இடுக்கண் அழியாமை இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துணர்வது அஃதொப்பது இல், 621 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். § 2 2 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். §23 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். $25 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஒம்புதல் தேற்றா தவர். 626 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். §27 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். 628 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். $29 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630