பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 242 அதிகாரம் 19 பசப்புறு பருவரல் 18. விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளில் உடன்பட் டேன்.இப்பொழுது பசலையுற்ற என் தன்மையை வேறுயாருக்குச் சென்று சொல்வேன்? - 182. அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும்பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் உரிமையோடு என் மேனிமேல் ஏறி ஊர்ந்து எங்கும் பரவி வருகின்றது. 1183 என் அழகையும் நனத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலை நிறத்தையும் எனக்குத் தந்துள்ளார். 184. யான் அவருடைய நல்லியல்புகளையே நினைக்கின் றேன். அவைபற்றியே பேசுவேன். அவ்வாறு இருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ? அறியேன். 185. அதோயார் எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார். இதோ பார் என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து பற்றிப் படர்கின்றது. 186, விளக்கின் ஒளிகுறையும் சமயத்தைப் பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போலவே, காதலரின் தழுவுதலின் சோர்வை பசலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. 187. தலைவரைத் தழுவியபடியே கிடந்தேன் பக்கத்தே சிறிது அகன்றேன். அவ்வளவிலே பசலை நிறம்அள்ளிக்கொள்வது பேல் என்மீது வந்து மிகுதியாகப் பரவிவிட்டதே. 188, இவள் பிரிவால் வருந்திப் பசலை நிறம் அடைந்தாள்' என்று என்னைப் பழி சொல்வதே அல்லாமல் இவளைக் காதலர் பிரிந்து சென்றார் என்று சொல்பவர் யாரும் இல்லையே 183.பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார் என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாகுக! 190. பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து சென்றவர். நமக்கு அருள்செய்யாததுபற்றி ஊரார் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசந்தேன் என்று பேர் பெறுவதும் நல்லதேயாகும்.