பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 6了 துறவறம் 33. கொல்லாமை அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். 32? பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை, 322 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று.அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 324 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 325. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. 327 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை 328 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. 329 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர். 330