பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 74 அதிகாரம் 37 அவா அறுததல் 38. எல்லா உயிர்க்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து அவா என்பதுதான் என்று &鲑。 9 ஒருவன் ஒன்றை விரும்ப வேண்டுமானால் பிறவாமை என்பதைனையே விரும்ப வேண்டும். அந்த நிலை அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். 363.அவாவற்ற தன்மைபோன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வம் ஒன்றும் இல்லை. 384, அவாவில்லாத நிலையே தூய்மையான நிலை வாய்மை யையே விரும்பி நடந்தால் அந்த நிலை தானாகவே நம்மை வந்து அடையும். - 365 பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே அவர் அநாத மற்றையவர் எல்லாரும்அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர். 386, ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும் அதனால் அவாவிற்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறியாகும். 357. ஆசையை ஒருவன் முழுதும் அறுத்து விட்டால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்ல செயல்கள் அவன் விரும்பிய படியே வந்து வாய்க்கும். 368 ஆசை அற்றவர்க்குத் துன்பம் இல்லையாகும் ஆசை இருப்பின் எல்லாத் துன்பங்களும் ஒழியாமல் மேலும் ம்ேலும் வந்து கொண்டிருக்கும். - 369, அவா எனப்படுகின்ற மிக்க கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில் இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும். 30. ஒருபோதும் நிரம்பாத தன்மையுடைய அவாவினை ஒழித்தால் ஒழிந்த அந்நிலையே பெரிதான இன்ப வாழ்வைத் தானாகவே தந்துவிடும்.