பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பொருள் 46. சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். 451 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. 452 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். 453 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. - 454 மனத்துய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். 455 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. 456 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 457 ഥങ്ങാ நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. 458 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459 நல்லினத்தி னுங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பது உம் இல். 46O