பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பொருள் 49. காலம் அறிதல் பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. 482 அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். 483 ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின், 484 காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். 485 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் .ی * தாக்கற்குப் பேருந் தகைத்து. 486 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. 488 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். 489 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. 490