பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பொருள் 52. தெரிந்து வினையாடல் நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 511 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. - 513 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். 514 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். 516 இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து ல் . அதனை அவன்கண் விடல். 517 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். 518 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. 519 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. 52O