பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பொருள் 65. சொல்வன்மை நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளது.உம் அன்று. 641 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் கர்த்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. 642 கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல். 643 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் - பொருளும் அதனினுஉங்கு இல், 644 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். 646 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். 649 இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். 65O