பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பொருள் 67. வினைத்திட்பம் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. . - 661 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். 663 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 664 வீறெய்தி வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். 665 எண்ணிய எண்ணியாங்கு எய்துபவ எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். 666 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 667 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். 668 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. 669 ஏனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. 67Ο