பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பொருள் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். 692 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 693 செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. . 694 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 695 றிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில வண்டுப வேட்பச் சொலல். 696 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். 697 இளையர் இனமுறையர் என் றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். 698 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். 699 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 7 OO