பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அறம் 2. வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11 துப்பாக்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. 12 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துள்நின்றுடற்றும் பசி, 13 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். 14 கெடுப்பதுஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. . 15 விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. 16 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். 17 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18 தானம் தவம்இரண்டும் தங்கா ದಿuಣi೭೧ುಹ6 வானம் வழங்கா தெனின். 19 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. 2O