பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பொருள் 78. படைச் செருக்கு என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின் றவர். 771 கான முயலெய்த அம்பினில் யானை - பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772 பேராண்மை என்ப தறுகண்டின் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. 773 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் . மெய்வேல் பறியா நகும்: 774 விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. 776 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. - 777 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்கீர் குன்றல் இலர். - 778 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779 புரந்தார்கண் நீர்மல்க்ச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. 780