பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பொருள் 90. பெரியாரைப் பிழையாமை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலு ளெல்லாம் தலை. 891 பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். 892 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. 893 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். 894 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். 895 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். 897 ன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு ன்றன்னார் மாய்வர் நிலத்து. 898 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். 899 இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். 900