பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பொருள் 94. சூது வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றது.உம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. 931 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932 உருளாயம் ஒவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். 933 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல், 934 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். 935 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியால் மூடப் பட்டார். 936 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். 937 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளிஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. 938 உடைசெல்வம் ತ್ಗ கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். 939 இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர். 94Ο