பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பொருள் 104. உழவு சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 1031 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. 1O32 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். 1O33 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். 1034 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்துண் மாலை யவர். 1O35 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது உம் விட்டேம் என்பார்க்கும் நிலை. iO36 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். 1O37 ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. 1O38 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். 1O39 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். 1O4O