பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இன்பம் 121. நினைந்தவர் புலம்பல் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. 12O1 எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல். 12O2 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். 12O3 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஒஒ உளரே அவர். 1204 தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து ஒவா வரல். 12O5 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் - உற்றநாள் உள்ள உளேன். 12O6 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். 12Ο7 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. 1208 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. 1209 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. 1210