பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இன்பம் 123. பொழுதுகண்டு இரங்கல் மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. 1221 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துண்ை. 1222 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துணிஅரும்பித் துன்பம் வளர வரும். . 1223 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். 1224 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. 1225 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். 1226 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். 1227 அழல்போலும் மாலைக்குத் துதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை 1228 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. 1229 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். 123O