பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 இன்பம் 125. நெஞ்சொடு கிளத்தல் நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241 காதல் அவரிலா ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. 1242 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். 1243 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காண லுற்று. 1244 செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். 1245 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தி.என் நெஞ்சு. 1246 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்.இவ் விரண்டு. 1247 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248 உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு. 1249 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். 125O