பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இன்பம் 127. அவர்வயின் விதும்பல் வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 1261 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. 1262 உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 1263 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறும்என் நெஞ்சு, 1264 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு. 1265 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட 1266 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். 1267 வினைகலந்து வென்றீக வெந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. 1268 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். 127Ο