பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறம் 29. கள்ளாமை எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு, 281 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 282 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். 283 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். 286 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். 287 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றாதவர். 289 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. 29O