பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அறம் 32. இன்னா செய்யாமை சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311 கறுத்துஇன்னா செய்தவக்"கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 312 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். 313 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 314 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை 315 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 316 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. 317 தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். 3.18 பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். 319 நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். 32O