பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறம் 35. துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341 வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டு இயற்பால பல. 342 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. 344 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை. 345 யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகும் புகும். 346 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. 347 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். 348 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். 349 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. 35O