பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பொருள் 40. கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 393 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். 394 உடையார்முன் இல்லாதார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். 395 தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துறும் அறிவு. 396 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. • 397 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. 398 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். 399 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. 4OO