150 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அந்த நேரத்திற்கான உதவி, உதவியைச் செய்கிறவரின் உதவி. இந்த இரண்டும்தான் உதவியின் அளவை மிகுதியை வெளிப்படுத்திக் காட்டும் என்பதால் உதவிடும் நேரம் காலம் நெஞ்சம் கண்டு, உதவியை அறிக என்று கூறிச் செல்கிறார் வள்ளுவர். . - 106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு பொருள் விளக்கம்: மாசற்றார் (மா + சற்றார்) - மேன்மையான நற்குணாளர்களுக்கும் உள்ள கேண்மை = (கேள் + மை) குற்றத்தை செவிமடுத்து மறவற்க = நிலையாக (அதனை) நீக்கிவிடு துன்பத்துள் = துயரம் நேர்கிற பொழுது துப்பு ஆயார் = உதவுவதனால் தனக்கு நன்மை கிடைக்குமா என்று எதிர்பார்க்காமல் உதவுபவர்; நட்பு = தொடர்பை துறவற்க = (என்றும்) துறந்து விடாதே சொல் விளக்கம்: மா= அறிவு, பெருமை, மேன்மை; சற் = நல்ல, சன். கேள்= செவி கொடு, கீழ்ப்படி, புத்திகேள்; மை = குற்றம் துப்பு = நன்மை; ஆயார்- ஆராய்பவர்; நட்பு = தொடர்பு, உறவு முற்கால உரை: +. குற்றமற்றவர் சிநேகத்தை மறவாதிருக்கக் கடவன். துன்ப காலத்து உதவினவர் சிநேகத்தை விடாதிருக்கக் கடவன். தற்கால உரை: - குற்றமற்றவரின் நட்பையும், காலத்தே உதவி செய்தவர்களையும் எந்த ஒரு காலத்திலும் மறக்கக் கூடாது. புதிய உரை: உதவுகிற பண்பாளரின் குறைகளை மறந்து விடு. மற்றவர் அவர் துன்பத்தில் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆராயாமல் உதவுகிறவரின் தொடர்பை துறக்காமலும் நன்றி அறிதல் வேண்டும். விளக்கம்: -- உதவுகிறவர்களின் தரம் பற்றி 5வது குறளில் கூறிய வள்ளுவர், 6 வது குறளில் மேன்மையானவர் என்பதாக மாசற்றார் என்கிறார்.
பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/153
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை