பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* † ருக்குறள் புதிய உரை 5.3 தி இந்த 6 வது குறளில் புலனடக்கத்தால் பெறுகிற அரிய சித்திகளை அற்புதமாக வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். 27. சுவைஒளி ஊறு,ஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு - பொருள் விளக்கம்: சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் உடலின் தொடு உணர்வு, செவியின் ஒசை, நாசியின் மணம் நாவின் சுவை, விழியின் ஒளி, என்ற ஐந்தின் - என்கிற ஐந்து புலன்களின் வகைதெரிவான் = செயல்படுசக்தியின் சீர்மையை ஆழமாய் புரிந்து கொண்டவன்; கண்ணே - உடம்பே உலகு = இந்த உலகில் பெருமையை வழங்குகிறது சொல் விளக்கம் கண் - உடம்பு, சரீரம், அகக்கண், புறக்கண் வகை = ஏது, கூறுபாடு, தரம் முற்கால உரை: சுவையும், ஒளியும், ஊறும், ஒசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும், ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம். தற்கால உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் ஐந்தின் விரிவுகளைத் தெரிந்த நீத்தாரிடத்தேதான் உலகியக்கம் அடங்கியுள்ளது. புதிய உரை: சுவை, ஒளி, உணர்வு, ஒசை, மணம் என்னும் ஐந்து புலன்களின் செயல்படுசக்தியை ஆழமாய் அறிந்து கொண்டவனின் உடம்பே இந்த உலகிற்குப் பெருமையளிக்கிறது. விளக்கம்: ஹம்புலன்களின் ஆற்றலும் ஆதிக்கமும் அனைவரும் அறிவர் ஐம பு ஆறறலும் ஆதககமு! னவரும அறவா. அவற்றை அடக்கிக் காக்கும் ஆண்மை உள்ளவரே துறக்க முடியும். துறத்தலுக்கு உடல் வலிமையும், மன வலிமையும், வேண்டும் என்று வள்ளுவரே 4வது குறளில் குறித்துள்ளார். ஐம்புலன்களின் ஆதிக்கம் அகத் தி லும் புறத் திலு ம் இரு ப் பதால் , ஐம் புல சக் திக ளின் குட் சமத்தை உணர்ந்து உடலால் காத்து, உலகில் உலக