பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. கூத்தாட்டு அவைக்குழாம்

       "கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
        போக்கும் அதுவிளிந் தற்று."

என்பது திருக்குறளில் ஒரு குறள். “செல்வம் நிலையாது. அது அழிந்துவிடும்” என்பது இதன் கருத்து!

இது நிலையாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று. ‘இவ்வுலகில் தோன்றும் பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியன’ என்பதே நிலையாமை என்பதின் பொருள்.

“நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக்கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு” என்று முதற்குறளில் கூறிய வள்ளுவர், அடுத்து “நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று” என்று இக்குறளில் கூறுகிறார்.

“குறைந்த செல்வம் ஒருக்கால் அழியலாம்; நிறைந்த செல்வம் எப்படி அழியும்” என்று நினைப்பவரை நோக்கியே எச்சரிக்கை செய்கிறது இக்குறள். “அது எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து வீடும்” என்பதை இக்குறளில் உள்ள ‘பெருஞ்செல்வம்’ என்பது மெய்ப்பிக்கும்,