பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


"இன்சொல் நல்லது; எவர்க்கும் நல்லது; எப்போதும் நல்லது. அதை வழங்குவதும் எளிது. அதனால் இழப்பு எதுவுமிராது. பெறுவதோ நன்மை, அடைவதோ இனிமை. அவை மட்டுமல்ல, ஏற்கனவேயுள்ள தீமையுங்கூட அழித்தொழிந்து போய்விடும்" என்பது இக்குறளின் திரண்ட கருத்து.

படியுங்கள் மறுபடியும் இக்குறளை “அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின்.”

இக்குறள் உங்களுக்குப் பயன்படுகிறதா? இன்றேல் பயன்படுத்திப் பாருங்கள். ஓய்வு உள்ளபோதெல்லாம் திருக்குறளைப் படியுங்கள். அதனால், நீங்கள் பெரும் பயனைப் பெறுவீர்கள்.

பயணப் பெட்டிகளில் எது எதையே வைத்துக் கொண்டு போகிறீர்கள். ஒரு திருக்குறளையும் அதில் வைத்துக்கொண்டு போவது நல்லது. அது வழிக்குத் துணையாகவும், பின் வாழ்வுக்குத் துணையாகவும் அமையும் ஒரு தனிப்பெருஞ் செல்வம்.

வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!