பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்பாகத்தின் மதிப்புரை

அண்ணாமலைப் பல்கலைக்கழக,
தமிழ்ப்பெரும் பேராசிரியர்,
உயர்திரு. டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார்
M. A., Ph.D அவர்கள்.

திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் திருக்குறளை எழுத்தெண்ணிப் படித்தவர். அதன் நுண்பொருள்களை ஆய்ந்து பிறர்க்கு எடுத்து வழங்கும் நாநலம் படைத்தவர். “எண்பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய் நுண்பொருள் காண் பதறிவு” என்னும் திருக்குறளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் அறிவு நிரம்பியவர்.

அவரால் இயற்றப்பட்ட இந்நூல் புலவர்க்கும் பொதுமக்கட்கும் இனியதோர் விருந்தாகும். திருக்குறட் பாக்களில் வரும் சொற்களை அலசியலசி ஆராய்ச்சி செய்து கடைந்தெடுத்த நுண்பொருள்களை, இனிய, எளிய, செந்தமிழ் நடையில் இந்நூலினுள் அவர் தந்திருப்பதை வரவேற்கின்றேன். “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத்தறித்த குறள்” என்றதன் உண்மையானது இச்சிறிய பெருநூலால் நன்கு விளங்குகிறது.

“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற இடத்தில் வரும் ”உயிரினும்' என்ற சொல்லுக்கும், “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்ற இடத்து வரும் “பிறர்” என்ற சொல்லுக்கும், “உடுக்கை யிழந்தவன் கைபோல” என்ற இடத்து வரும் “இழந்தவன்” என்ற சொல்லுக்கும்