160
15 , சுற்றந்தழால்
இஃது, இல்லாத காலத்தினும் விடாரென்றது.
529 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடி ன்றி நீர்நிறைந் தற்று.
(இ-ள்) கலக்கப்படுவானோடு கலப்பின்றி யொழுகுவானது வாழ்க்கை. குளமாகிய வ ைள வு கரையின்றி நீர் நிறைந்தாற் போலும், (எ-று).
இது, சுற்றந் தழுவிக்கொள்ளாக்கால் செல்வங் காவல்படா தென்றது. இத்துணையும் சுற்றத்தா ரெல்லாரோடும் ஒழுகுந் திறன் கூறிற்று. 5
526. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்
(இ-ஸ்) அன்பறாச் சுற்றம் ஓரிடத்தே பொருந்தி யொழுக மாயின், அது கிளைப்பறா ஆக்கமாகிய பலவற்றையுந் தரும் ,
(எ-று).
பிள்ளைகளை வேறு வேறு இடத்து நிறுத்த வேண்டும் என் பது சில ஆசாரியர் மதம். அதனை மறுத்து மக்களை ஒரிடத்தே கொண்டிருக்கவேண்டும் என்பது உம் அதனானே குலம் வளரும் என்பது உம் கூறிற்று. 6
5 27. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னது நோக்கி வாழ்வார் பலர்.
(இ-ள்) அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒரு வனைத் தலைமையாலே பார்ப்பானாயின், அத்தலைமையை நோக்கி வாழ்வார் பலர், (எ-று).
மக்கள் பலருண்டானால் எல்லாரையும் ஒக்கப்பாராது நீதி மான் ஒருவனை இளவரசாக்க வேண்டு மென்றது. 7
528. காக்கை கரவா கரைந்துண்னு மாக்கமு
-ன நீ ரார்க்கே யுள.