இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
191
25. இடுக்கணழியாமை
தெளிவு-துணிவு இது, பொருட்கேட்டினால் வருந் துன்பத் திற்கு அழியாதாரைக் கூறிற்று. 8
529. இன்பத்து எளின்பம் விழையாதான் றுன் பத்துட்
டுன்ப முறுத லிலன்.
(இ-ள்) இன்பம் நுகருமிடத்து அதனை விரும்பாதவன், அத னால் வருந்துன்பம் நுகருமிடத்து வருத்த முறுதலிலன் (எ-று).
இன்பம் நுகருமிடத்து அதனை விரும்பாமையாவது அவ் விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது, காமத்தால் வருந்துன் பத்திற்கு அழியாதா ரைக் கூறிற்று. 9
630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.
(இ-ள்) இன்னாமையை இன்பம்போலக் கொள்வனாயின், அது பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம், (எ-று).
மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தை இன்பம் போல கொள்வனாயின், பகைவரும் மதிப்பரென்றது. 10
அரசியல் முடிந்தது.