226
3. பொருளியல்-1. நாடு
(இ-ள்) குடிமை செய்தல் பல காலத்திலே ப்ல வரினும் அதனை ப், பொறுத்து நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு
கொடுக்கவல்லது நாடு, (எ-று).
தளர்ச்சியைச் செய்தலின் பொறை ஆயிற்று. குடிமையாவது
கடமையொழிய வருமவை. இதனானே குடிமக்கள் பண்புடையராக வேண்டும் என்பது கூறிற்று. 9
? 40. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
(இ-ள்) மேற்கூறியவாற்றான் எல்லாம் நேர்ந்ததாயினும், பயனில்லையாம்; வேந்தனது அமைதியை உடைத்தல்லாத நாடு, (எ-று).
இது, நாட்டிற்கு அரசனும் பண்புடை யனாக வேண்டு மென்றது. 10
2. அரண்
அரணானது அரணிலக்கணங் கூறுதல், மேல் நாட்டிலக்கணங் கூறினார் நகர் இலக்கணங் கூறுகின்றாராதலின், அதன்பின் இது கூறப் பட்டது.
741 ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
( இ-ள்) வலியாற்றுவார்க்கும் அரண் பொருளாம்; வலியின் மையான் அஞ்சித் தம்மைக் காப்பார்க்கும் அரண் பொருள்; ஆத லால், அதனைச் செய்யவேண்டும், (எ-று).