384
9. உறுப்புநலனழிதல்
கருவியைக் கருத்தாவாக கூறினார். பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் தனது தோள் வாட்ட முற்றது கண்ட தோழிக்குச் சொல் வியது.
1234. பணை நீங்கப் பைந்தொடி சோருந் துணை நீங்கத்
தொல் கவின் வாடிய தோன் .
( இ-ள்) துணைவர் நீங்குதலானே பழைய அழகு இமுத்த தோள்கள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடா
நின்றன, (எ-று) .
பசுத்த வளை-மரகதத்தினாற் செய்த வளை. (தோள்) வாடு தலே யன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலை மகள் சொல்லியது,
1235. கொடியார் கொடுமை யுரைக்குத் தொடியொடு
தொல் கவின் வாடி ய தோள்.
(இ-ள்) கொடியாரது கொடுமையைச் சொல்லா நின்றன, வளையோடு கூடப் பழைய வாகிய அழகினை யிழந்த தோள்களும்
(எ-று
தலைமகள் கூறிய சொற்கேட்டு, ‘யான் முன்பே தோள் கண்டு அறிந்தேன் அவர் கொடிய ராதலை’ என்று தலைமக ளாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்துத் தோழி கூறியது
1236. தொடி யொடு தேரைெ கிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து .
(இ-ஸ்) வளையோடே தோள்கள் பண்டு போல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்; நீ அவரைக் கொடியரென்று சொ ல்லுகின்றதற்கு நொந்து, (எ-று)
இஃது, ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றுவலென்பது படத் தலைமகள் சொல்லியது. 6
123 7. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோ ட் பூச லுரைத்து