414
18. ஊடலுவகை
1823. உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னுரட லினிது.
(இ-ள்) உண்டலினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன் பம்; அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம் (எ-று)
பசியினால் உண்ணும் உணவு இன்பந் தரும்; அது போல, ஊடலினால் கூடல் இன்பந்தரும் என்றவாறு. 3
1824. ஊடுதல் காமத்திற் கின்ய மதற்கின்யங்
கூடி முயங்கப் பெறின்.
(இ-ஸ்) காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்; அவ் ஆடுதற்கு இன்பமாம் அதன் பின் கூடிக் கலக்கப் பெற்றால், (எ. று).
இது ‘யாம் பெற்றேம் பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிது’ என்று கூறியது. m 4
1325. ஊடலிற் றோன்றுஞ் சிறுதுணி துல்லளி
வசடிலும் பாடு பெறும்.
(இ-ள்) ஊடலின்கண் தோன்றுகின்ற சிறியதுணி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து, (எ-று).
புணர்தல் இன்பமென் ருர் புணரா தொழியினுமாமென்று கூறப்பட்டது. 5
1826. உள டிப் பெறுகுவங் கொல்லோ துதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு.
(இ-ள்) இன்னும் ஒருகால் ஊடிப்பெறுவோமோ துதல் வெயர்ப்பக் கூடிய கூட்டத்தாலே யுண்டாகியஇன்பம், (எ-று).
ஊடுதல் இருவர்க்கும் உண்டாகலால் பொதுப்படக் கூறினார். துதல்வியர்ப்ப என்றான், புணர்ச்சிக்காலத்து வேகம்மிகுதலை. இது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.