65
17. தீவினேயச்சம்
இது, வறுமை திரத் தீமை செய்யினும் பின்பும் வறியனா மென்றது. T 5
206. திப்பால தான் பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்.
(இ-ள்) தன்னைத் துன்பப்பகுதியாயின நலியாமல் வேண் டுபவன், தீமையாயினவற்றைப் பிறர்க்குச் செய்யா தொழிக. (எ-று) .
இது, நோயுண்டாமென்றது. 6
207. தீயவை தீய பயத்தலாற் றியவை
தீயினும் மஞ்சப்படும்.
(இ-ள்) தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே. அத்தொழில் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் நீக்கத்தினும் சுடுதலின் அதனினும் மிக அஞ்சப்படும் (எ-று).
மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனை மனத்தினானும் நினைக்கலாகா தென்றது. 7
208. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு
(இ-ள்) என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார், சீரிய ரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை, (எ-று) .
இஃது, இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
209. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யா னெனின்.
(இ~ள்) ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யா னாயின் தனக்குக் கேடு வருதலில்லையென்று தானே யறிக (எ-று).
இது, கேடில்லை யென்றது.