பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 62

பொதிந்திருப்பதைக் கீழ்வரும் விளக்கங்கள்வழி உணர்ந்துகொள்க ர எழுத்தமைப்புகளில் மெய்ப்பொருள்

உண்மைகள் உள்ளமை - - உயிரெழுத்துகள் குறில், நெடில் என்றிருப்பதைப் போலவே, வாழ்கின்ற உயிர்களும் குறுகிய, நெடிய வாழ்நாளைப் பெற்றிருப்பதை உணர்க. - உயிர்மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிக்கப்பெற்றிருப்பதைப் போலவே, உயிர்களின் மெய்களும் அஃதாவது உடல்களும், வலிவாகவும், மெலிவாகவும், இடையீடாகவும் இருப்பதை உணர்க. இனி, இவை போல் பல உண்மைகளும் உள்ளதை விரிக்கில் பெருகும். அவை நிறைவுரையில் காட்டப் பெறும். - 2) சொற்களில் மெய்ப்பொருள் உண்மைகள்

உள்ளமை: - உயிர் என்னும் சொல், உடலை இயக்குவது - செலுத்துவது - நடத்துவது (உய்த்தல் இயக்குதல், செலுத்துதல், நடத்துதல்) என்னும் பொருளையும், - உடல், உடம்பு என்னும் சொற்கள், உயிர் இயங்குவதற்கு உடனாக - துணையாக உள்ளது என்னும் பொருளையும் புலப்படுத்தி நிற்பதைக் காண்க.

அதேபோல், உடல் என்று பொருள் தரும் மெய் என்னும் சொல்லும், உயிரிருப்பதை மெய் - உண்மை - என்று உணர்த்துவதையும் காண்க

இனி, பிறப்பு, இறப்பு என்னும் இரண்டு சொற்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் உள்ள முதல் எழுத்துகள், முறையே பி என்னும் உயிர்மெய் எழுத்தையும், இ என்னும் உயிரெழுத்தையும் கொண்டிருக்கின்றன. மற்ற 'றப்பு என்னும் எழுத்துகள் பொதுவானவை. பிறப்பு என்னும் சொல்லின் முதலெழுத்து பி யில் ப் + இ. அஃதாவது மெய்யோடு உயிர் சேர்ந்திருப்பதையும், இறப்பு என்னும் சொல்லின் முதலெழுத்து இ மெய்யை இழந்து உயிராகத் தனித்து நிற்பதையும் உணர்க. - - இவை, பிறப்பு என்பது மெய்யோடு உயிர் சேர்ந்துள்ள நிலை என்பதையும், இறப்பு என்பது, மெய்யை விட்டு உயிர் நீங்கியிருக்கும் நிலை என்பதையும் உணர்த்துகின்றமையை அறிந்துகொள்க.