பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

109


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் OS

“சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண். அஃது இராவணின் இலங்காபுரியிலும் வாணனின் சோணிதபுரத்திலும் இருந்தது.

“தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போய்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்’ - சிலப்.ஆய்ச்சியர் குரவை, ‘ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன்’ - நான்மணி, 2.

சோ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் பொதுவான மதிற பெயராகவும் ஆண்டு விட்டனர்.

சோமேல் இருந்தொரு கோளு வெனின்

(சி.சி. மறைஞான தேசிகர் உரை). காத்தல் என்பது காத்திருத்தல் அல்லது நிலையில்லாது தங்கியிருத்தல். Wait என்னும் ஆங்கிலச் சொற்கும் tarry stay என்று ஆக்கசுபோர்டு ஆங்கிலச் சிற்றகர முதலி பொருள் கூறியிருத்தல் காண்க

சோகா என்னும் சொல்லை வடசொல் தொடர்பினதாகக் காட்டல் வேண்டி, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி, அதற்குச் சோகம்யா என்று மூலங் குறித்திருப்பது பொருந்தாது. யாத்தல் கட்டுதல், அரை யாப்பு, கழல்யாப்பு, மார்யாப்பு (மாராப்பு, விதலையாப்பு முதலிய கூட்டுச் சொற்கள்போல் சோக(ம்) யாப்பு என்றொரு சொல்லின்மையும், அவ் விருபிறப்பியில் (Hybrid) யாப்பு என்னும் சொல் இயற்கையாகப் பொருந்தாமையும் நோக்குக.

இனி, சோ என்னும் சொல்லையும், வாணன் தலைநகர்ப் பெயரான சோணிதபுரம் என்பதன் சிதைவாக அவ் வகரமுதலி காட்டியிருப்பதும் குறும்புத்தனமாம். வாணனுக்கு முந்தின இராவணன் காலத்திலேயே சோவரண் இருந்தமையை நோக்குக”

- திருக்குறள் தமிழ்மரபுரை. - எனவே சோகாப்பர் என்பதற்குத் துன்புறுவர் என்று பொருள் கொள்வது சொல் வரலாறும், மாந்த வரலாறும் அறியாதவர் கூற்றாம் என்று விடுக்க 4. இது, பொதுவாக அனைவர்க்கும் இருக்க வேண்டிய நாவடக்கத்தை முகாமையாகக் குறித்தலாலும், முன்னைய குறளில் கூறப்பெற்ற ஐம்புலன் அடக்கத்தில் ஒருபுலன் ஆகிய நாப்புலன் வாய்ப்புலன்) அடக்கத்தை உலகியலில் பெரிதாகக் கருத வேண்டியிருத்தலாலும், அதன் பின்னர் இதை வைக்க வேண்டியதாயிற்றென்க.