பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

335



மயக்கம் குறித்த செருக்கு :

‘தீவினை என்னும் செருக்கு’
- 201
‘யான்எனது என்னும் செருக்கு’
- 246

மனநிறைவு குறித்த செருக்கு :

‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்’
- 431
‘வள்ளியம் என்னும் செருக்கு’
- 598
‘தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார்’
- 916

விறல் ஈனும் - அனைத்து வெற்றியையும் தரும்.

விறல் - வெற்றி.

- வாழ்வியல் நோக்கி அனைத்து வெற்றியும் என்று பொருள் பெற்றது.

ஈனும் பெற்றுத்தரும்.

-‘பெற்று’ எனும் சிறப்புநிலை இங்குத் தேவையற்றதாகலின் தவிர்க்கப்பெற்றது.

3. வெஃகுதல் உணர்வின் முடிவான தீமையையும், வடிவான நன்மையையும் இக்குறள் உணர்த்துவதால் முன்னதன் பின்னரும், அதிகார முடிவாகவும் வைக்கப் பெற்றது.