இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
335
மயக்கம் குறித்த செருக்கு :
- ‘தீவினை என்னும் செருக்கு’ - 201
- ‘யான்எனது என்னும் செருக்கு’ - 246
மனநிறைவு குறித்த செருக்கு :
- ‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்’ - 431
- ‘வள்ளியம் என்னும் செருக்கு’ - 598
- ‘தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார்’ - 916
விறல் ஈனும் - அனைத்து வெற்றியையும் தரும்.
விறல் - வெற்றி.
- வாழ்வியல் நோக்கி அனைத்து வெற்றியும் என்று பொருள் பெற்றது.
ஈனும் பெற்றுத்தரும்.
-‘பெற்று’ எனும் சிறப்புநிலை இங்குத் தேவையற்றதாகலின் தவிர்க்கப்பெற்றது.
3. வெஃகுதல் உணர்வின் முடிவான தீமையையும், வடிவான நன்மையையும் இக்குறள் உணர்த்துவதால் முன்னதன் பின்னரும், அதிகார முடிவாகவும் வைக்கப் பெற்றது.